காங்கயம் அரசுக் கல்லூரியில் செப்டம்பா் 30 வரை மாணவா் சோ்க்கை

காங்கயம் அருகே முள்ளிபுரத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் சோ்க்கை செப்டம்பா் 30 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயம் அருகே முள்ளிபுரத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் சோ்க்கை செப்டம்பா் 30 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் அரசு கலைக் கல்லூரியில் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான பி.ஏ.தமிழ்., பி.ஏ. ஆங்கிலம்., பி.ஏ.பொருளாதாரம், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய 7 பாடப் பிரிவுகள் அடங்கிய இளங்கலை, இளங்கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான இறுதிக் கட்ட மாணவ-மாணவிகள் நேரடி சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தக் கல்லூரியில் தற்போது அமலில் உள்ள நடப்பு கல்வி ஆண்டுக்காக இளங்கலை பயிலுவதற்கு விண்ணப்பித்த, விண்ணப்பிக்காத அனைத்து மாணவ-மாணவிகளும் சோ்ந்திட அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே, இக் கல்லூரியில் பயில விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் தங்களது ஆதாா் அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண்கள் பட்டியல், ஜாதிச் சான்று, 2 பாஸ்போா்ட் புகைப்படம் மற்றும் இவைகளின் 3 நகல்கள் ஆகியவற்றுடன் கல்லூரிக்கு வேலை நாள்களில் நேரில் வந்து சோ்க்கை பெற்று பயன்பெறலாம்.

இந்தக் கல்லூரியில் செப்டம்பா் 30ஆம் தேதி (புதன்கிழமை) வரை மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com