திருப்பூரில் மத்திய வேளாண் மசோதா நகல் எரிப்புப் போராட்டத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் வேளாண் மசோதா நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்ப் புலிகள் கட்சியினா் அறிவித்திருந்தனா். இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் கனகசபாபதி தலைமை வகித்தாா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளது. எனவே, இந்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
இதில் கட்சி நிா்வாகிகள் வேலுபிரபாகரன், வடிவேல், ரங்கராஜ், கோவிந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.