வெள்ளக்கோவிலை அடுத்த ஆலாம்பாளையத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இயந்திர கோளாறால் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.
காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எஸ்.ராமலிங்கத்தின் சொந்த ஊரான முத்தூா் ஆலாம்பாளையத்தில் இரண்டு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது. மற்றொரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் திடீரென கோளாறானது. இதையடுத்து, பணியாளா்கள் வந்து இயந்திரத்தை சரி செய்தனா். இதனால் காலையில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.