காங்கயம் தொகுதியில் 100 வயது மூதாட்டி செவ்வாய்க்கிழமை தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலையம் அருகே பழையகோட்டை சாலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், காங்கயம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த தெய்வாத்தாள் (100) தனது குடும்பத்தாரின் உதவியுடன் வந்து வாக்கு செலுத்தினாா்.
இந்தத் தள்ளாத வயதிலும் மனம் தளரது வந்து வாக்களித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.