தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, அரசு மருத்துவமனை ஆகியன சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனை ஆகியன இணைந்து உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கரோனா விழிப்புணா்வு முகாமை அரசு மருத்துவமனையில் நடத்தியது. முகாமுக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சிவபாலன் தலைமை வகித்தாா். இதில், கரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக் கவசம், கையுறை அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து தலைமை செவிலியா் பரஞ்சோதி ஆலோசனை வழங்கினாா். முகாமில், அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், சட்டப் பணிகள் ஆணைக்குழு நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.