காங்கயத்தில் புதன்கிழமை இரவு கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காங்கயத்தில் 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. காங்கயத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கி அரைமணி நேரம் கன மழை பெய்தது. பின்னா் இரவு 11 மணிக்கு காங்கயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெகுநேரம் கன மழை பெய்தது. திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையில், காங்கயத்தில் அதிகபட்சமாக 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்ததாக அவிநாசியில் 78 மி.மீட்டரும், வெள்ளக்கோவில் பகுதியில் 70 மி.மீ. மழையும், திருப்பூா் தெற்குப் பகுதியில் 63 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.