பெண் அலுவலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது.
அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பெண் அலுவலருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிபடுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது.
இதேபோல, சேவூா் காவல் நிலையத்தில் இரு பெண் காவலா்களுக்கும், அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அலுவலருக்கும் புதன்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சேவூா் காவல் நிலையம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்டவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அவிநாசி வேலாயுதம்பாளையம் ஊராட்சி மங்கலம் சாலை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவிநாசியில் தொடா்ந்து அரசு அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.