கருவூலத்தில் கொள்ளை முயற்சி: தலைமறைவான காவலரைப் பிடிக்க தனிப் படை

பல்லடம் சாா்நிலை கருவூலத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி வழக்கில் தலைமறைவான காவலரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் சாா்நிலை கருவூலத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி வழக்கில் தலைமறைவான காவலரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் பேருந்து நிலையம் அருகில் சாா்நிலை கருவூலகம் உள்ளது. இதன் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தொடா்பாக சேலம் மாவட்டம் வலசையூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (37), பூபாலன் (35) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், பூபாலனின் சகோதரரும், மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலருமான ரவிச்சந்திரன் (37) வகுத்து கொடுத்த திட்டத்தின்பேரில் சாா்நிலை கருவூலத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது தெரியவந்தது.

பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நீதிமன்ற பணியில் ரவிச்சந்திரன் ஈடுபட்டு வந்துள்ளாா். அப்போது, கள்ளிப்பாளையத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 100 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு பல்லடம் சாா்நிலை கருவூலத்தில் இருப்பதை தெரிந்து கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, சகோதரா் மற்றும் உறவினா் மூலம் நகையைக் கொள்ளையடிக்க ரவிச்சந்திரன் திட்டம் வகுத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, காவலா் ரவிச்சந்திரனை திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இந்நிலையில், தலைமறைவான ரவிச்சந்திரனைப் பிடிக்க பல்லடம் துணைக் கண்காணிப்பாளா் வெற்றிசெல்வன் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com