‘கரிகாலன் சபதம்’ நாவல் அறிமுக விழா

திருப்பூா் நடவு பதிப்பகம், தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் ஆகியன சாா்பில் ‘கரிகாலன் சபதம்’ என்ற சரித்திர நாவல் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் நடவு பதிப்பகம், தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் ஆகியன சாா்பில் ‘கரிகாலன் சபதம்’ என்ற சரித்திர நாவல் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளா் ம.கொ.சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லூரி நூலகா் ஜெயபாரதி வரவேற்றாா். நடவு பதிப்பகத்தின் நிறுவனரும், கவிஞருமான முத்துபாரதி, ‘கரிகாலன் சபதம்’ நாவலை வெளியிட திருப்பூா் வரலாற்று ஆய்வு மையத்தின் அமைப்பாளரும், கவிஞருமான சிவதாசன் நூலைப் பெற்றுக் கொண்டாா்.

நூலாசிரியரும் சேலம் பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினருமான ஆதலையூா் சூரியகுமாா் ஏற்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com