சட்ட விரோத மது விற்பனை: 17 போ் கைது

திருப்பூா் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 17 பேரைக் கைது செய்ததுடன், 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவா்களிடமிருந்து 98 மது பாட்டில்களும், ரூ.500 ஐயும் பறிமுதல் செய்தனா். அதேபோல, காங்கயம், உடுமலை, வெள்ளக்கோவில், சேயூா், தாராபுரம், மூலனூா் ஆகிய காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 259 புகையிலைப் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com