மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்: ஆணையா் கிராந்திகுமாா் பாடி உத்தரவு

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.
மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்: ஆணையா் கிராந்திகுமாா் பாடி உத்தரவு

திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண் 49 பாலாஜி நகா் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள், சாலைப் பணிகளை ஆணையா் கிராந்திகுமாா் பாடி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

அதேபோல, மாநகராட்சி வாா்டு 52 பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள நுண்ணுயிா் உரமாக்கல் கிடங்கை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், குப்பாண்டம்பாளையத்தில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியைப் பாா்வையிட்டதுடன், பராமரிப்புப் பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து, வள்ளலாா் நகா் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்புப் பணிகளையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com