நாளை ஆா்ப்பாட்டம்: அதிமுக ஆலோசனை

மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் 9ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் 9ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, திருப்பூா் புறநகா் மேற்கு மாவட்டச் செயலாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலை வகித்தாா். இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி.பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளா் அலகுமலை சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், திருப்பூரில் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்துக்கு பல்லடம் தொகுதியில் இருந்து 10 ஆயிரம் போ் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com