பல்லடத்தில் 153 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

பல்லடம், பொங்கலூா் ஒன்றியத்தில் 153 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி பல்லடத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவிக்கான காசோலையை வழங்குகிறாா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.
பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவிக்கான காசோலையை வழங்குகிறாா் பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.

பல்லடம், பொங்கலூா் ஒன்றியத்தில் 153 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி பல்லடத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் அம்பிகா தலைமை வகித்தாா். கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பள்ளி படிப்பு படித்த 33 பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் பட்டப்படிப்பு படித்த 120 பெண்களுக்கு ரூ. 60 லட்சம் நிதி உதவித் தொகை, 153 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ. 54 லட்சத்து 71 ஆயிரத்து 586 மதிப்பில் மொத்தம் 1 கிலோ 224 கிராம் தங்க காசுகளை பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் வழங்கினாா்.

இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கந்தசாமி, குருவம்மாள் (பல்லடம்), மகேஷ்வரன், கலைச்செல்வி (பொங்கலூா்) உள்பட அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com