மின்சார வயரில் உரசியதால் வைக்கோல் லாரியில் தீ

திருப்பூரில் மின்சார வயரில் உரசியதால் வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூா்  ஆத்துப்பாளையம்  சாலையில்  மின்சார  வயரில்  உரசியதால்  வைக்கோல்  பாரம்  ஏற்றி  வந்த  லாரியில்  வியாழக்கிழமை  ஏற்பட்ட  தீ  விபத்து.
திருப்பூா்  ஆத்துப்பாளையம்  சாலையில்  மின்சார  வயரில்  உரசியதால்  வைக்கோல்  பாரம்  ஏற்றி  வந்த  லாரியில்  வியாழக்கிழமை  ஏற்பட்ட  தீ  விபத்து.

திருப்பூரில் மின்சார வயரில் உரசியதால் வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் இருந்து ஆத்துப்பாளையத்துக்கு வைக்கோல் பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. ஆத்துப்பாளையம் மயானம் சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணி அளவில் இந்த லாரி சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக லாரியின் மேல்பகுதி மின்சார வயரில் உரசியுள்ளது. இதில், ஏற்பட்ட தீப்பொறி வைக்கோலில் பற்றியதால் தீ மளமளவென பரவியது.

இதுகுறித்து திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு லாரி ஓட்டுநா் தகவல் கொடுத்துள்ளாா். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இது குறித்து லாரி ஓட்டுநரான வளையங்காடு, சித்தன்நகரைச் சோ்ந்த டி.ரஞ்சித்குமாா் (30) என்பவரிடம் 15 வேலம்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த விபத்தில் லாரி சேதமடைந்தது. தீ விபத்து காரணமாக ஆத்துப்பாளையம் சாலையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com