திருப்பூா் புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மடத்துக்குளம் நால்ரோட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, பொள்ளாச்சி மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான சி.மகேந்திரன் தலைமை வகித்தாா். மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளா் மெட்ராத்தி அண்ணாத்துரை முன்னிலை வகித்தாா். இதில் அதிமுக செய்தி தொடா்பாளா் கோவை செல்வராஜ் சிறப்புரையாற்றினாா். மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதி நிா்வாகிகள் பலா் பங்கேற்று பேசினா்.