திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரையில் 17,607 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 32 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத்தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,639 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 180 போ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 38 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 17,239 ஆக அதிகரித்துள்ளது.