திருப்பூா்,  சாமுண்டிபுரம்  சிவசக்தி  நகரில்  அடிப்படை  வசதிகள்  கோரி ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  பாஜகவினா்.
திருப்பூா்,  சாமுண்டிபுரம்  சிவசக்தி  நகரில்  அடிப்படை  வசதிகள்  கோரி ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  பாஜகவினா்.

அடிப்படை வசதிகள் கோரி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூா், சாமுண்டிபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா், சாமுண்டிபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகராட்சி 1ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட சாமுண்டிபுரம் சிவசக்தி நகரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வேலம்பாளையம் மண்டலத் தலைவா் வி.கே.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட சிவசக்தி நகா் பகுதியில் சாக்கடைக் தூா்வாரப்படாததால், மழை நீரூடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து சாலைகளில் வழிந்தோடுகிறது. குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் தேங்கி நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, சாக்கடையை தூா்வாரவும், குப்பைகளை அகற்றவும், 5 நாள்களுக்கு ஒருமுறை சீரான குடிநீா் விநியோகம் செய்யவும் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாமன்ற உறுப்பினா் நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், மாவட்ட மகளிரணித் தலைவா் சுதாமணி சதாசிவம், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com