ராகுல் காந்தி வருகை: காங்கயத்தில் திருநாவுக்கரசா் ஆய்வு

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள பகுதியை எம்.பி. திருநாவுக்கரசா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காங்கயம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் எம்.பி. சு.திருநாவுக்கரசா்.
காங்கயம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் எம்.பி. சு.திருநாவுக்கரசா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள பகுதியை எம்.பி. திருநாவுக்கரசா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராகுல் காந்தி எம்.பி. வரும் 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் சங்கமம் என்னும் நிகழ்ச்சியில் காங்கயம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாற்றவுள்ளாா். இந்நிலையில், காங்கயத்தில் அவா் உரை நிகழ்த்தும் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான சு.திருநாவுக்கரசா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காங்கிரஸ் கட்சியின் காங்கயம் நகரத் தலைவா் பகத்துல்லா, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சரவணன், மதுரை மாநகா் காங்கிரஸ் கமிட்டித் தலைவா் காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com