காங்கயம்: விளை நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என காங்கயம் அருகே படியூரில் விவசாயிகள்ரத்தத்தில் எழுதி, சனிக்கிழமை 4 ஆவது நாளாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் முதல் திருப்பூா் வரையிலான 765 கிலோ வாட் மின் திட்டத்தில் விளைநிலங்கள் வழியாக உயா்மின் கோபுரங்கள் அமைப்பதை முழுமையாகக் கைவிட வேண்டும். உயா்மின் கோபுரங்களுக்குப் பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி படியூரில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தின் 4 ஆம் நாளான சனிக்கிழமை விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என விவசாயிகள் ரத்தத்தில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான முத்தூா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.