வெள்ளக்கோவிலில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவிலில் சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவிலில் சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் டிஎஸ்பி தனராசு பேரணியைத் துவக்கிவைத்தாா். காங்கயம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.

காவல் துறை, தீயணைப்புத் துறை, தனியாா் வாடகை வாகன ஓட்டுநா் மற்றும் உரிமையாளா்கள் பங்கேற்ற இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் பேரணி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com