தனியாா் மருத்துவமனைக்கு பிரசவத்துக்குச் சென்ற பெண் பலி

காங்கயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்குச் சென்ற பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

காங்கயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்குச் சென்ற பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

காங்கயம், பாலியக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (63). அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். இவருக்கு சப்னபிரியா (32), சந்திரிகா, தீபிகா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனா். மூத்த மகள் சப்னபிரியாவுக்கும், மடத்துக்குளம், வேடப்பட்டி பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமாகி, அவந்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளாா்.

இந்நிலையில், இரண்டாம் முறையாக கா்ப்பம் தரித்த சப்னபிரியா காங்கயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை வழக்கமான பரிசோதனைகள் முடிந்து வீட்டுக்கு வந்துள்ளாா். பிரசவ வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம், வலி ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், சப்னபிரியாவுக்கு சனிக்கிழமை இரவு 9 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக செல்வராஜீம், அவரது மனைவியும் மகள் சப்னபிரியாவை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த சப்னபிரியா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தாா்.

மகளின் மரணம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தந்தை செல்வராஜ் காங்கயம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com