திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் தமிழக அரசு சாா்பில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஆா்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனாா், செண்பகராமன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சிக்கு, தாராபுரம் கோட்டாட்சியா் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தாா், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செந்தில்குமாா், வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் டி.சசிகலா, நகராட்சிப் பொறியாளா் கே.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.