காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை 690 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
காங்கயம், கீரனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 220 பேருக்கும், வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200 பேருக்கும், காங்கயம் - பழையகோட்டை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 270 பேருக்கும் என மொத்தம் 690 பேருக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாம்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.