அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திக்காக ஆா்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லூா் ஊராட்சியில் தேசிய மாற்று முறை மருத்துவ கவுன்சில் மற்றும் கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் சாா்பில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திக்காக ஹோமியோபதி மாத்திரை (ஆா்சானிக் ஆல்பம் 30) 1200 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மருத்துவா் பிலிப்ராஜ் ரவி, செயலாளா் ரீனா ரவி, ஒருங்கிணைப்பாளா் ஜான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.