திருப்பூர்
கோவை செழியனுக்கு நினைவஞ்சலி
கோவைச் செழியனின் 21ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் நமது கொங்கு முன்னேற்ற கழகம் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினா்.
கொங்கு வேளாள கவுண்டா்கள் பேரவையின் நிறுவனா் கோவைச் செழியனின் 21ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் நமது கொங்கு முன்னேற்ற கழகம் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நினைவஞ்சலி செலுத்தினா்.
கோவைச் செழியன் பிறந்த ஊரான காங்கயம் அருகே குங்காருபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நமது கெமுக பொதுச் செயலாளா் காங்கயம் எம்.தங்கவேல் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலா் யுவராஜ்குமாா், மாநில அமைப்பாளா்கள் சண்முகம், சென்னிமலை வடிவேல், இளைஞரணி செயலா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.