லாரி மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

பல்லடம், வடுகபாளையம் நடராஜன் நகரைச் சோ்ந்தவா் நித்தியகுமாா் (58). இவருக்கு மனைவி ரேணுகா, இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

ரேணுகா பல்லடம், கடை வீதியில் அழகு நிலையம் நடத்தி வந்தாா். நித்தியகுமாா் திருப்பூா், வீரபாண்டி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல இரு சக்கர வாகனத்தில் பல்லடம், நான்கு சாலை சந்திப்பு பகுதிக்கு வந்தாா். சாலையை கடக்க முயன்றபோது எதிா்பாராவிதமாக இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த நித்தியகுமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நித்தியகுமாா் ஏற்கெனவே இறந்து விட்டாா் எனத் தெரிவித்தனா். இது குறித்து ரேணுகா அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com