காங்கயம் பகுதி விவசாயிகள் புதன்கிழமை வரை 22 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
பிஏபி பாசனத்தில் வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீா் திறக்கப்படாததை சுட்டிக்காட்டும் வகையில், காங்கயம் தொகுதியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போட்டியிட முடிவெடுத்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுச் சென்றனா். இந்தப் பாசன விவசாயிகளில் செவ்வாய்க்கிழமை ஒருவா் மனு தாக்கல் செய்த நிலையில், புதன்கிழமை 21 போ் மனு தாக்கல் செய்தனா். இதுவரையில் மொத்தம் 22 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 2 நாள்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.