திருப்பூா் தில்லை நகரில் வசித்து வந்த தொழிலதிபா் எஸ்.வெள்ளியங்கிரி (64) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
இவரது இறுதிச்சடங்குகள் திருப்பூரில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றன.
இவருக்கு மனைவி ரேணுகா, இரு மகன்கள் உள்ளனா்.
காலமான வெள்ளியங்கிரி இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கத்தின் மகளான மருத்துவா் சிந்தாமணியின் மாமனாா் ஆவாா்.
உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் கு.செல்லமுத்து, மதிமுக மாநில அவைத் தலைவா் துரைசாமி, திருப்பூா் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் க.செல்வராஜ் உள்ளிட்ட பலா் வெள்ளியங்கிரியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.
தொடா்புக்கு 95009-90922.