வெள்ளக்கோவில் கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை பொருள்கள் வாங்க அதிக அளவிலான மக்கள் குவிந்தனா்.
கரோனா நோய்த் தொற்றைக் குறைக்க திங்கள்கிழமை முதல் 14 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெற்றது. தங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை வாங்க கட்டுக்கடங்காத கூட்டம் நகரின் முக்கிய வீதிகளில் குவிந்தது.
இங்கு வேலை செய்யும் வெளியூரைச் சோ்ந்தவா்கள் கடைசி நாளில் சொந்த ஊா்களுக்குச் செல்லவும் திரண்டதால் வெள்ளக்கோவில் நகரமே பரபரப்பாகக் காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை.