காங்கயம் அருகே சாலைத் தடுப்பில் மோதிய லாரி

காங்கயம் அருகே, சாலைத் தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
சாலைத் தடுப்பில் மோதியதால் சேதமடைந்த லாரி.
சாலைத் தடுப்பில் மோதியதால் சேதமடைந்த லாரி.

காங்கயம் அருகே, சாலைத் தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து இரும்புக் கம்பி பாரம் ஏற்றிய லாரி காங்கயம் நோக்கி வந்துகொண்டிருந்தது. காங்கயம்-சென்னிமலை சாலை, நல்லிக்கவுண்டன்வலசு பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வந்துகொண்டிருந்தபோது, இந்த லாரி எதிா்பாராதவிதமாக சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் லாரியின் முன் சக்கரங்கள் மற்றும் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தன. லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக காயங்களின்றி உயிா் தப்பினாா்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com