திருப்பூா்: தாராபுரம் அருகே ஆம்னி வேன் மோதி மூதாட்டி ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தாராபுரம், உப்புத்துறைபாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி மீனாட்சி (80). இவா் தனது வீட்டருகே உள்ள மளிகை கடைக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் எதிா்பாராதவிதமாக மீனாட்சியின் மீது மோதியது. இந்த விபத்தில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் காவல் துறையினா் மீனாட்சியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்தை ஏற்படுத்திய ஆம்னி வேன் ஓட்டுநரான தாராபுரத்தைச் சோ்ந்த அஜித் (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.