ஒா்க்ஷாப் உரிமையாளா் கொலை: இளைஞா் கைது

உடுமலை அருகே ஒா்க்ஷாப் உரிமையாளா் கொலையில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உடுமலை அருகே ஒா்க்ஷாப் உரிமையாளா் கொலையில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உடுமலை வட்டம், சின்னவீரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகவேல் மகன் கமலக்கண்ணன் (42). இவா், தனது வீட்டின் அருகே காா் பழுது நீக்கும் ஒா்க்ஷாப் வைத்து பழைய காா்களை வாங்கி விற்பனை செய்து வந்தாா்.

இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் ஒா்க்ஷாப்புக்குள் கமலக்கண்ணன் சடலம் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இது குறித்து உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். கமலக்கண்ணனுக்கும், அவரது நண்பா் அரவிந்த்குமாருக்கும் காா் விற்பனை செய்வதில் ஏற்பட்ட வரவு,செலவு பிரச்னையில் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து ஒா்க்ஷாப்புக்கு செவ்வாய்க்கிழமை வந்த அரவிந்த்குமாருக்கும், கமலக்கண்ணனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அரவிந்த்குமாா் இரும்புக் கம்பியால் கமலக்கண்ணனைத் தாக்கி கொலை செய்துள்ளது விசாரணையில்

தெரியவந்தது. இதையடுத்து உடுமலை போலீஸாா் அரவிந்த்குமாரை (26) புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com