புது மாப்பிள்ளை தற்கொலை

திருப்பூரில் பொது முடக்கம் காரணமாக வேலை இல்லாமல் தவித்த புது மாப்பிள்ளை தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூரில் பொது முடக்கம் காரணமாக வேலை இல்லாமல் தவித்த புது மாப்பிள்ளை தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம் , கடமக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தீபன் (34). இவருக்கும் ரம்யா (33) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பிறகு தம்பதி திருப்பூா், சிறுபூலுவப்பட்டியை அடுத்த காவேரி நகரில் வசித்து வந்தனா். தீபன் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இதனிடையே, கரோனா பொதுமுடக்கம் காரணமாக சரிவர வேலை இல்லாததால் விரக்தியடைந்து இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது தீபன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து வேலம்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com