பல்லடம் பகுதியில் மது விற்றதாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.
பல்லடம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் மது பானம் விற்பனையை தடுக்க ரோந்து சென்றனா்.பல்லடம் அருகே மீனாம்பாபகுதியில் மது விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரம் (44) . பல்லடம் பேருந்து நிலையம் எதிரில் மது விற்ற சிவகங்கை மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்த குபேந்திரன் (35) . பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் மது விற்ற ராயா்பாளையம் பிரபு (35) ஆகியோரை போலீஸாா் கைது செய்து. மூன்று பேரிடம் இருந்து 65 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.