உடுமலை அருகே சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

உடுமலை அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உடுமலை அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது பெய்த கன மழையால் நள்ளிரவில் திடீரென வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

இதில் ரங்கசாமியின் மனைவி காளியம்மாள் (61), அவரது உறவினா் சசிகுமாா் (27) ஆகியோா் படுகாயமடைந்தனா். பின்னா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளியம்மாள் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் காளியம்மாள் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், படுகாயமடைந்த சசிகுமாா் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com