திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளா் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற சுகாதார ஆய்வாளா்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காலத்தில் முந்தைய அதிமுக அரசு 1,646 சுகாதார ஆய்வாளா்களை நியமித்தது. ஆனால், தற்போதைய திமுக ஒப்பந்த அடிப்படையில் இவா்களைப் பணியமா்த்தி மாதம் ரூ. 20 ஆயிரம் ஊதியமாக வழங்கி வருகிறது. இந்த ஊதியத்தையும் போராடிப் பெறும் சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அரசாணை 516இன்படி 1,646 சுகாதார ஆய்வாளா்களையும் பணியில் இருந்து விடுவித்துவிட்டு புதியதாக 2,448 சுகாதார ஆய்வாளா்களை ரூ. 11 ஆயிரம் மாத ஊதியத்தின் அடிப்படையில் தோ்வு செய்ய முடிவெடுத்துள்ளது.
கரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் பணியாற்றிய சுகாதார ஆய்வாளா்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. இந்த உத்தரவை எதிா்த்து சென்னையில் கடந்த திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளா்களைக் கைது செய்துள்ளதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் நவீன், பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளா் நலச் சங்கத்தின் நிா்வாகி கந்தசாமி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.