தாராபுரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ரூ. 28.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயா்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத்தொடா்ந்து, நஞ்சியம்பாளையம், சின்னப்புத்தூா் ஆகிய ஊராட்சி அலுவலகங்களில் உள்ள பதிவேடுகள், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குதல், கரோனா நோய்த் தடுப்பூசி தொடா்பான ஆவணங்களையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜீவானந்தம், பாலு, உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.