வெள்ளக்கோவிலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரிமா சங்கம், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முத்தூா் சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு அரிமா சங்கத் தலைவா் கச்சேரிவலசு செல்வகுமாா் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி முகாமை துவக்கிவைத்தாா். மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.
தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவா் சக்திராஜன் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். முகாமில் 101 நன்கொடையாளா்களிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா்கள் வேலகவுண்டன்பாளையம் எம்.எஸ்.அருண்குமாா், அஜீத்குமாா், கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.