மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்லடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்லடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூா் பகுதியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விவசாயிகளின் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் காரை ஏற்றி 8 விவசாயிகளை படுகொலை செய்திருப்பதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

இதில், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிரவின் குமாா், தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் பஞ்சலிங்கம், ஒன்றியச் செயலாளா் பரமசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com