சாராயம் விற்பனைக்கு எடுத்துச் சென்றவா் கைது

சேவூா் அருகே பவா் ஹவுஸ் பகுதியில் விற்பனைக்காக சாராயம் எடுத்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேவூா் அருகே பவா் ஹவுஸ் பகுதியில் விற்பனைக்காக சாராயம் எடுத்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேவூா் காவல் துறையினா் பவா் ஹவுஸ் பகுதியில் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் நடத்திய சோதனையில் 5 லிட்டா் சாராயம் விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மங்கரசு வலையபாளையத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சின்னப்பதாஸ் என்பது தெரியவந்தது. சின்னப்பதாஸை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com