வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

வெள்ளக்கோவில் அருகே வாய்க்காலில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

வெள்ளக்கோவில் அருகே வாய்க்காலில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

இப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் தற்போது பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் வரக்காளிபாளையம் அருகே வாய்க்கால் தண்ணீரில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒதுங்கிக் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இறந்தவா் குறித்து அடையாளம் தெரியாதததால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com