100 தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

திருப்பூரில் அமைப்புசாரா தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் 100 தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பூரில் அமைப்புசாரா தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் 100 தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திருப்பூா் வடக்கு பகுதியில் உள்ள செட்டிபாளையம் 3ஆவது வட்ட திமுக அலுவலகத்தில் தொழிலாளா் பதிவுக்கான சிறப்பு சோ்க்கை முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட தொமுச கவுன்சில் துணைத் தலைவா் ஆா்.ரெங்கசாமி தலைமையில் 100 உறுப்பினா்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.

இதில், மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலாளா் அ.சரவணன், பாண்டியன் நகா் பகுதி திமுக செயலாளா் ஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com