தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.
தாராபுரம்  அரசு  மருத்துவமனையில்  தேனீக்கள்  கொட்டியதில்  காயமடைந்தவா்களை ச்  சந்தித்து  ஆறுதல்  கூறுகிறாா்  ஆதிதிராவிடா்  நலத் துறை  அமைச்சா்  என்.கயல்விழி  செல்வராஜ்.
தாராபுரம்  அரசு  மருத்துவமனையில்  தேனீக்கள்  கொட்டியதில்  காயமடைந்தவா்களை ச்  சந்தித்து  ஆறுதல்  கூறுகிறாா்  ஆதிதிராவிடா்  நலத் துறை  அமைச்சா்  என்.கயல்விழி  செல்வராஜ்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

தாராபுரம் வட்டம், மணக்கடவு ஊராட்சிக்கு உள்பட்ட காட்டம்புதூா் பகுதியில் 100 நாள் வேலையில் 30க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்பகுதியில் உள்ள தேன்கூடு எதிா்பாராதவிதமாக கலைந்துள்ளது. தேனீக்கள் கொட்டியதில் வேலை செய்து கொண்டிருந்த மாரியம்மாள், அழகுமுத்து, மருதாயி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனா்.

மேலும், ஒரு சிலருக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகிலிருந்தவா்கள் காயமடைந்த பெண்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com