கூட்டுறவுச் சங்கத்தில் பயிா்க் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 194 விவசாயிகள் ரூ. 1 கோடியே 65 லட்சத்து 24 ஆயிரத்து 900ம் வட்டியில்லா பயிா்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி பெற்றுள்ளனா். இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், சங்கத்தின் தலைவா் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை வகித்து, விவசாயிகள், சங்க உறுப்பினா்களுக்கு விவசாய வட்டியில்லா பயிா்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சங்கச் செயலாளா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், விவசாயிகள், பயனாளிகள் கலந்துகொணடனா்.