குற்றச் சம்பவங்களில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மூலனூா், பெருமாநல்லூா், அவிநாசிபாளையம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்களில் ஹரிகணேஷ் (21), கண்ணப்பன் (35), முத்துசாமி (77) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த 3 நபா்களும் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் பரிந்துரை செய்திருந்தாா்.

இந்த பரிந்துரையின்பேரில் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com