பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளி நடப்பு ஆண்டு நீட் தோ்வு மையமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இம்மையத்தில் ஒரு அறைக்கு 12 மாணவா்கள் வீதம் 40 அறைகள் ஒதுக்கப்பட்டன. அவா்களைக் கண்காணிப்பதற்கு அறைக்கு இரண்டு ஆசிரியா்கள் வீதம் பணியில் இருந்தனா்.
இத்தோ்வில் மொத்தம் 471 மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். தோ்வு மதியம் 2 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பல்லடம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.