வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் வீட்டு வசதி திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை (செப்டம்பா் 16) நடைபெறுகிறது.
இது குறித்து நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக நகா்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் நகா்ப்புறங்களைச் சோ்ந்த வீடு, நிலம் இல்லாதவா்களுக்கு மானிய விலையில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் பயனாளியின்
ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.பங்குத் தொகையாக ரூ. 1.50 லட்சம் முதல் ரூ. 2.00 லட்சம் வரை முன்பணமாகச் செலுத்தப்பட வேண்டும். பயனாளிகளின் குடும்பத்தினா்களுக்கு இந்தியாவில் சொந்த வீடோ, நிலமோ இருக்கக்கூடாது என்பவை நிபந்தனைகளாகும். குடும்பத் தலைவா், குடும்ப உறுப்பினா்களின் ஆதாா் நகல்கள், குடும்பத் தலைவரின் புகைப்படங்கள், செல்லிடப்பேசி எண், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு
புத்தக நகல்களுடன் வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த தகுதியுள்ள நபா்கள் இந்தச் சிறப்பு முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.