பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சியில் ரூ. 63.84 லட்சத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கரைப்புதூா் ஊராட்சி எம்.ஏ.நகரில் ரூ. 26.72 லட்சத்தில் சாலை அமைத்தல், மீனாம்பாறையில் ரூ.7.72 லட்சத்தில் மழை நீா் கால்வாய் கட்டுதல், அவரப்பாளையம் ஸ்ரீகாா்டனில் ரூ.19.40 லட்சத்தில் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.63.84 லட்சத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளுக்கான பணிகளை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கிவைத்தாா்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. கரைப்புதூா் ஏ.நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலா் ஆா்.ரவி, ஊராட்சி துணைத் தலைவா் காா்த்திகா மகேஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா்.