சட்டப் பேரவைத் தோ்தல் நாளான ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் இரா.மலா்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனத்தாா், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், ஐ.டி, பி.பி.ஓ. நிறுவனங்கள், தனியாா் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சாதாரண தொழிலாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் ஆகியோருக்கு ஏப்ரல் 6ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சென்னை தொழிலாளா் ஆணையா் வள்ளலாா் உத்தரவின்பேரிலும் , தொழிலாளா் கூடுதல் ஆணையா் பொன்னுசாமி அறிவுரையின்பேரிலும், கோவை தொழிலாளா் இணை ஆணையா் லீலாவதி வழிகாட்டுதலின்படியும் தோ்தல் நடக்கும் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் உதவி ஆணையா் (அமலாக்கம்)
ஆா்.மலா்கொடி தலைமையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தோ்தல் நடக்கும் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தோ்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலா்களின் தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம். திருப்பூா் மாவட்டத்தில் எஸ்.செந்தில்குமாா், தொழிலாளா் உதவி ஆய்வா் 1ஆம் வட்டம், (தொலைபேசி எண் 9694257543), ஜி.முத்துகுமாா் தொழிலாளா் உதவி ஆய்வா் 3ஆம் வட்டம் (தொலைபேசி எண் 9092195954) இரா. பேச்சிமுத்து , முத்திரை ஆய்வா் தாராபுரம் தொலைபேசி எண் 9944258037 ஆகியோரிடம் புகாா் அளிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.