காங்கயம் அருகே, முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ.1, 89, 000 மற்றும் 260 ஜீன்ஸ் பேண்ட் ஆகியன புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கயம் அருகே, முத்தூா் சாலையில் உள்ள படியாண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை காலை 8.30 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே காரில் வந்த காா்த்திக் என்பவா் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ரூ.1, 89, 460 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்தப் பணத்தை தோ்தல் பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.
பின்னா், காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலா் ரங்கராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவகாமி ஆகியயோா் முன்னிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் துணை வட்டாட்சியா் சந்திரசேகா் காங்கயம் சாா் நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தாா்.
பரிசுப் பொருள்கள் பறிமுதல்:
காங்கயம் அருகே, பழையகோட்டை சாலை பகுதியில், தோ்தல் பறக்கும் படையின் மற்றொரு குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, முறையான ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வரப்பட்ட 259 ஜீன்ஸ் பேண்ட்களை பறிமுதல் செய்து காங்கயம் தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.